கி.பி. 1800 - கி.பி. 1856

கி.பி.1800



இந்திய மக்கட் தொகை 200 மில்லியன்



கி.பி.1800 - 1801



தென்னிந்திய விடுதலைப்புரட்சி (முதல் விடுதலை போராட்டம்) உருவானது. மன்னர்கள் செயலிழந்தனர். பாளையக்காரர்கள் மக்களின் நலன்களைப் பேணி உரிமைகளைக் காத்து நின்றனர். கோட்டைகளையும் படைபலத்தையும் கொண்டு மக்கள் தொடர்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். அயலார் ஆதிக்கத்தை ஏற்கவில்லை. திராவிட பண்பாட்டு நிறுவனங்களும், ஆங்கிலேய பண்பாட்டு நிறுவனங்களும் மோதின.



கி.பி.1800 - 1801



தமிழகத்தில் நடைப்பெற்ற முதல் விடுதலை போராட்டம், மருதபாண்டியனின் சீரங்கம் அறிக்கை, இந்திய விடுதலை இயக்கவரலாற்றின் துவக்க விழாவாகவும் எல்லைக் கல்லாகவும் அமைந்தது.



கி.பி.1801



மே22, பாஞ்சாலங்குறிச்சியில் போர், மழை, இடி, புயல், ஏற்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. ஊமைத்துரை காயங்களுடன் கமுதியை அடைந்தபோது மருத பாண்டியன் வரவேற்பு அளித்தான்.



கி.பி.1801



அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, சின்ன மருது, செவத்தம்பி, முத்துக்கருப்பன் என பலரும் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.



கி.பி. 1801



நவம்பர் மாதம் 16ஆம் நாள் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் கொல்லப்பட்டான்.



கி.பி. 1802-1857



சென்னை (தற்போதைய தென் இந்தியா) மாநிலத்தை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி
செய்தது.



கி.பி. 1804



இராமசாமி என்ற தாசன் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு விடுதலை இயக்கம்
தொடங்கப்பட்டது.



கி.பி. 1806



சூலை 10 ஆம் நாள் கடலூரில் சிப்பாய்க்கலகம்.



கி.பி. 1812



நெப்பொலியன் உருசிய போரில் மிகுந்த சேதத்துடன் திரும்பினான். 500,000 போராளிகளில் 20,000 போராளிகளே உயிருடன் திரும்பினர்.



கி.பி. 1814



முதல் புகை வண்டி விடப்பட்டது.



கி.பி. 1820



அமெரிக்காவை முதல் புலம் பெயர்ந்த இந்தியர் அடைந்தார்.



கி.பி. 1822-1892



யாழ்ப்பாணத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் காலம். வேதங்களுடனும், ஆகமங்களுடனும் ஒத்து நோக்க தமிழில் பைபிளை மொழி பெயர்த்தார்.



கி.பி. 1823-1874



இராமலிங்க வள்ளலார் காலம். வடலூர் சத்திய சன்மார்க்க சபை அமைத்தவர். போலிக் கடவுட் தன்மையினை சாடியவர். மனித நேயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்.



கி.பி. 1825



அதிக அளவு தமிழர்கள் ரியூனின், மொரிசியசு தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.



கி.பி. 1835



19,000 தமிழர்களும் மற்றவர்களும் மொரிசியசு தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.



கி.பி. 1841



தென்னாற்காடு மாவட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.



கி.பி. 1852



சென்னை தன்னுரிமை நலக்கழகம் தொடங்கப்பட்டது.


கி.பி. 1856



கத்தோலிக்க பாதிரியர் கால்டுவெல்டு "திராவிடர்" என்ற சொல் தென்னிந்தியரைக் குறிப்பதாகும் எனக் குறிப்பிட்டார்.